பதிவு செய்த நாள்
25
ஜூலை
2015
12:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள், 20 நாட்களில், 61.20 லட்சம் ரூபாயும், 580 கிராம் தங்கம், மூன்றரை கிலோ வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.கடந்த, 20 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் திறறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 61,20,686 ரூபாய் ரொக்கம், 580 கிராம் தங்கம், 3,536 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.