தங்கக்குதிரை வாகனத்தில் அருள்பாலித்த மதுரை மீனாட்சி அம்மன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2015 10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 18 முதல் 28 வரை நடக்கிறது. இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: ஆடிப்பட்டம் தேடி விதை என்பர். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு எட்டாம் நாள் திருவிழாவில் தங்கக்குதிரை வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.