காட்டுமன்னார்கோவில்: உடையார்குடி துர்க்கையம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சி றப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழாவாக நேற்று தேர்திருவிழா நடந்தது. அதனையொட்டி காலையில் காவடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திகடனை செலுத்தினர். பின்னர் அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.