Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுபதீஸ்வரன் கோவிலில் தெய்வத் ... சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா: பக்தர்களுக்கு அனுமதி! சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை ஆடி கார்த்திகை: வெற்றிவேல் முருகனைச் சரணடைவோம்!
எழுத்தின் அளவு:
நாளை ஆடி கார்த்திகை: வெற்றிவேல் முருகனைச் சரணடைவோம்!

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
11:08

நாளை ஆடி கார்த்திகை. இந்த இனிய நாளில் முருகப்பெருமானை மனதில் நினைத்து, இந்த ஸ்தோத்திரத்தை படிப்போருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்.

* குன்று தோறும் குடி கொண்டவரே! தெய்வானை மணாளரே! வள்ளி நாயகரே! குன்றக்குடியில் உறைபவரே! குறிஞ்சி ஆண்டவரே! தணிகாசல மூர்த்தியே! திருமால் மருமகனே! தகப்பன் சுவாமியே! சிக்கல் சிங்கார வேலரே! தண்டாயுத பாணியே! செங்கதிர் வேலவரே! முருகப் பெருமானே! முத்தமிழ் வித்தகரே! மரகத மயில் வாகனரே! விநாயகரின் சகோதரரே! ஆறுபடை வாழும் அண்ணலே! சண்முக நாதரே! எங்களுக்கு செல்வ வளம் தந்தருள்வீராக.

* உமையவள் மைந்தரே! சோலைமலை நாயகரே! வடபழநி ஆண்டவரே! எட்டுக்குடி வேலவரே! எண்கண் உறைபவரே! ஏழைப் பங்காளரே! கதிர்காம வேலவரே! காவடிப் பிரியரே! கந்தக் கோட்டத்தில் வாழ்பவரே! ஆறெழுத்து அண்ணலே! சரவண பவனே! கங்கை புத்திரரே! சூரனுக்கு வாழ்வு தந்தவரே! அவ்வைக்கு கனி அளித்தவரே! திருப்புகழ் நாயகரே! வண்ண மயில் வாகனரே! அபிஷேகப் பிரியரே! சிவனார் நெற்றியில் உதித்தவரே! வேடர் குலதெய்வமே! வேங்கை மரமாக நின்றவரே! சுப்பிரமணியரே! குமரப் பெருமானே! சிவகுரு நாதரே! எங்கள் விருப்பங்களை நிறைவேற்றித் தருவீராக.

* கார்த்திகை பெண்களின் கண்மணியான கார்த்திகேயரே! மாயோனின் மருமகனே! சஷ்டி விரத நாயகரே! பன்னிருகை பெருமானே! அருணகிரியை காத்தவரே! சேவல் கொடி தாங்கியவரே! நக்கீரர் மனம் கவர்ந்தவரே! நல்லோர் நெஞ்சில் வாழ்பவரே! அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்தவரே! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பவரே! வயலுõர் நாயகரே! குமரகோட்டத்தில் அருள்பவரே! எங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தந்தருள்வீராக.

* கருணாமூர்த்தியே! அழகு தெய்வமே! பார்வதி பாலகரே! சரணடைந்தவரைக் காப்பவரே! ஆவினன்குடி வாழ்பவரே! கந்தப் பெருமானே! தேவசேனாபதியே! மருதமலை ஆண்டவரே! வெண்ணீறு அணிந்தவரே! குமரக் கடவுளே! சிந்தனைக்கு இனியவரே! என்றும் இளையவரே! ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்தவரே! வேதம் போற்றும் வித்தகரே! கண் கண்ட தெய்வமே! கலியுக வரதரே! உமது அருளால் உலக உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழ வேண்டுகிறேன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar