Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மையார்குப்பம் அன்னியம்மனுக்கு ... கானாங்கட்டி முனியப்பன் சுவாமிக்கு முப்பூசை விழா! கானாங்கட்டி முனியப்பன் சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடிப்படை வசதிகள் இல்லாமல் மடப்புரத்தில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
அடிப்படை வசதிகள் இல்லாமல் மடப்புரத்தில் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

11 ஆக
2015
01:08

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.  மடப்பு  ரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலம். வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைக  ளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலில் கழிப்பிடம், காலணி பாதுகாக்கும் அறை   உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்க, பொருட்கள் வைக்க கட்டடம் கட்டியும் இன்று வரை பயன்  பாட்டிற்கு வராததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.  கழிப்பிட வசதி இல்லாததால் வெளியூர் பக்தர்கள் வைகை ஆற்றுக்குள் இயற்கை உபாதையை   கழிக்க ஒதுங்குகின்றனர்.  இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் இருந்து பணம், நகையை பறித்து செல்கின்றனர். காலணி பாதுகாக்  கும் அறையில் ஒரே ஒரு ஊழியர் இருப்பதால் பக்தர்கள் கோயில் வாசலில் காலணிகளை விட்டு செல்கின்றனர்.  கோயில் வாசல் முழுவதும் செருப்  புகள் நிறைந்திருப்பதால் பக்தர்கள் கஷ்டப்படுகின்றனர். கோயில் வாசலை மறைத்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டு   கோயிலுக்குள் செல்ல வேண்டியுள்ளது.

வெளியூர் பக்தர் முனீஸ்வரன் கூறுகையில்; கோயிலில் அடிப்படை வசதி எதுவுமே இல்லை. கோயில் வாசலில் செருப்பை கழட்டி விட்டு சாமி கும்  பிட்டு வந்தால் செருப்பு காணாமல்  போய்விடுகிறது. வெளியூரில் இருந்து வரும் நாங்கள் சுமைகளை வைத்து கொண்டே சாமி கும்பிட வேண்டி  யுள்ளது. பொருட்களை வைத்து செல்ல எந்த பாதுகாப்பு அறையும் கிடையாது. சரியான கழிப்பிட வசதியில்லாததால் திறந்த வெளியையே  பயன்ப  டுத்த வேண்டியுள்ளது, என்றார்.  கோயில் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம் கூறுகையில், காலணி பாதுகாப்பு அறையில் ஒரே ஒரு ஊழியர் தான்   பணியில் உள்ளார். ஆக்கிரமிப்பு கடைகள் விரைவில் அகற்றப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar