Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.,1ல் ... யஜூர் வேத ஆவணி அவிட்டம்: நாளை பூணுால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சைவ, வைணவ வழிபாட்டு நடுகல் பென்னாகரம் அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2015
12:08

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில், சைவ, வைணவ வழிபாட்டை வலியுறுத்தும், நடுகற்கள் இதுவரை தென்படவில்லை. ஆனால், இரு சமய வழிபாட்டை குறிக்கும், நடுகல் ஒன்று, தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் வட்டம், தாசம்பட்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், இந்த நடுகல் உள்ளது. நடுகல்லில், பல்வகை சிற்பங்களுடன், சிவலிங்கம், சங்கு, சக்கரம் போன்றவை உள்ளன. தர்மபுரி அரசு கலை கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:இந்த நடுகல் தாசம்பட்டியில் இருந்து, 4 கி.மீ., தொலைவில், வனப்பகுதியில், உள்ளது. சேலம் மாவட்டம், கொளத்துார் பகுதியில் உள்ள குறுமனுார் மக்கள், இந்த நடுகல்லை குலதெய்வமாக வணங்குகின்றனர். நடுகல்லில், பெண் ஒருவர், தலை மீது குவளையை வைத்தபடி நிற்கிறார். அருகில், வீரன் ஒருவன் எதிரியின் குதிரையை வாளால் குத்தி போரிடுகிறான்.

நடுகல்லின் மேல்பகுதியில் சிவலிங்கம் உள்ளது; மேலும், அரசன் சொர்க்கத்தில் உள்ளது போன்ற உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வைணவ வழிபாட்டு சின்னங்களான, சங்கு, சக்கரமும் உள்ளது. குறுமன் பழங்குடியினர், குறிப்பிட்ட காலம் வரை, மூதாதையர்களை மட்டுமே வழிபட்டனர். பின், சமதள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த போது, அங்குள்ள மக்களின் கலாசாரங்களுக்கு மாறத் தொடங்கினர். அப்போது, சிவ, வைணவ வழிபாட்டை மேற்கொண்டுள்ளனர். இந்த நடுகல், 15-ம் நுாற்றாண்டின் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, தொல்லியல் துறையினர் கூறுகின்றனர். பெண்ணின் தலையில் உள்ள கொண்டை, வேட்டி அணியும் முறை போன்றவற்றின் மூலம், இதை உறுதி செய்துள்ளனர். சிவ, வைணவ வழிபாட்டை இணைந்து வலியுறுத்தும் வகையில், தர்மபுரி மாவட்டத்தில் அறியப்பட்ட முதல் நடுகல் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar