Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளக்கொளி பெருமாள் கோவில் புதிய ... பராமரிப்பின்றி சீரழிந்து வரும் ருத்திரவாலீஸ்வரர் கோவில்! பராமரிப்பின்றி சீரழிந்து வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

29 ஆக
2015
11:08

கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் புராண கதையை நினைவுபடுத்தும் வகையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய, பாண்டிய மன்னன் பொதுமக்களில் ஒவ்வொருவரும் வந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அதில், வந்தி அம்மை என்ற வயது முதிர்ந்த பெண்மணிக்கும் கரையை அடைக்க மன்னனின் ஆணை இருந்தது. இப்பெண்மணியால் வேலை செய்ய முடியவில்லை.இப்பெண்மணிக்கு உதவி செய்ய, சிவபெருமான் கூலி ஆளாக வந்து, வந்தி அம்மையிடம் கூலியாக பிட்டு உணவை உண்டு விட்டு வேலைக்கு சென்றதாக புராண கதை உள்ளது. இக்கதை, ஆவணி மூலநட்சத்திரத்தில் நடந்ததால், அதனை நினைவுபடுத்தும் வகையில், கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், வாணியர் சமூக நலச் சங்கம் சார்பில், சிறப்பு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. அதில், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், குங்குமம், அரிசி மாவு போன்றவைகளால் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவலோநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் சிவலோகநாதருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar