பதிவு செய்த நாள்
31
ஆக
2015
11:08
திருவாரூர்: திருவாரூர், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில்,ஆடிப்பூர விழாவை ஒட்டி, நேற்று, அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும், பால் அபிஷேகமும் நடைபெற்றன. திருவாரூர், பிடாரிகோவில் தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சக்திபீடம் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனுக்கு, ஆண்டுதோறும், ஆடிப்பூர விழாவை ஒட்டி,பக்தர்கள், கஞ்சி வார்த்து,பால் அபிஷேகம் செய்வர். நேற்று,11ம் ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு,ஆயிரக்கணக்கான பக்தர்கள், கஞ்சி வார்த்து,அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். மேலும்,பக்தர்கள், கருவறைக்குள் சென்று, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். முன்னதாக, நேற்று காலை, 6:00 மணிக்கு, அம்மன் உருவ படத்துடன்,ஆடிப்பூர கஞ்சி ஊர்வலமும்,பால்குட வீதி உலாவும் நடந்தன. பிற்பகல்,1:00 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.