பதிவு செய்த நாள்
03
செப்
2015
10:09
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, உற்சவர் மாட வீதிகளில் உலா வந்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவம் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் நேற்று, யாகசாலை பூஜை காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரையும், பின் இரவு, 7:00 மணி முதல், 8:15 மணி வரையும் நடந்தன. மேலும், வீரராகவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. மாலை, 5:30 மணியளவில், பெருமாள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.