திருக்கனுார்: கூனிச்சம்பட்டு, துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு காலனி யில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத் தில் அமைக்கப்பட்டுள்ள துர்க்கை அம்மன் பிரதிஷ்டா ஆரம்ப அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு துர்க்கை அம்மன் கரிகோலம், விநாயகர் பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு, துர்க்கா ஹோமம், யாக வேள்வி யும், காலை 8:45 மணிக்கு, துர்க்கை அம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.