பதிவு செய்த நாள்
04
செப்
2015
11:09
ராமநாதபுரம் : உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா, செப்., 8 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில், ராமபிரானால் பூஜிக்கப் பெற்றது. இங்கு விநாயகர் சித்தி, புத்தி தேவியர் சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ் தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில், சதுர்த்தி விழா செப்., 8 ல் காலை 8 மணிக்கு திருக்கொடி யேற்றுடன் துவங்குகிறது. செப்., 17 வரை 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் சிம்மம், மயில், ரிஷபம், யானை, காமதேனு மற்றும் குதிரை போன்ற வாகனங்களில் தேவியர்களுடன் விநாயகர் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக செப்.,15 ல் திருக்கல்யாணமும், 16 ல் தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ் தானத்தினர், விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.