அருணகிரிநாதர் எந்த நாளில் முக்தியடைந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒருமுறை வள்ளிமலை சுவாமிகள், திருவேரகமாகிய சுவாமிமலைக்கு சென்றிந்தார். அத்தலத்தை சிறப்பித்து பாடியிருந்த அருணகிரியின் மறைவு நாளை அறிந்து கொள்ள விரும்புவதாக முருகனிடம் கேட்டார். அப்போது முருகனே நேரில் தோன்றி, அவர் கார்த்திகை மூல நட்சத்திரத்தில் முக்திபெற்றார் என்றாராம்.