Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெசன்ட்நகர் அன்னை ஆலய ஆண்டு விழா ... சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பஞ்சலோக 18 படிகள் தயார்! சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2015
10:09

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில், 43 உப சன்னிதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு, நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்றிரவு துவங்கியது.வைணவ தலங்களில், முதன்மையானதாக கருதப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நாளை, முதல்கட்ட கும்பாபிஷேகம் நடக்கிறது.

Default Image
Next News

கோவில் திருப்பணிகளுக்கு, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.திருப்பணிகள் முழுமையாக முடிந்த, தெற்கு மற்றும் கிழக்கு கோபுரம் உட்பட, 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னிதிகளுக்கும், நாளை, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்காக, கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், 43 அடி நீளம், 27 அடி அகலத்தில், யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக சாலை பூஜை, நேற்றிரவு, 7:30 மணிக்கு துவங்கியது. அதில், திருவிளக்கு ஏற்றுதல், இறை அனுமதிபெறுதல், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, காவிரி ஆற்றில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டு, மூர்த்திகளுக்கும், விமானங்களுக்கும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நாளை காலை, 5:40 மணிக்கு, 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில், பக்தர்களுக்கு தேவையான வசதிகளும், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார் சன்னிதி, தாயார் சன்னிதி, பெருமாள் சன்னிதி ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar