மனிதனின் பிரம்ம முகூர்த்தம் என்பது சூரிய உதயத்திற்கு முன்பாக உள்ள ஒன்றரை மணி நேரம் தான். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைகளும், பிரார்த்தனைகளும் மிகச்சிறந்த பலனைத்தரும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் : மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இதில் பிரம்ம முகூர்த்தமாக அமைவது மார்கழி மாதம். தேவர்களும் இந்த மார்கழி மாதம் முழுவதும் இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபடுகிறார்கள். இந்த மாதத்தில் தான் கிருஷ்ண பகவானால் பகவத் கீதை அருளப்பட்டது. இந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்வதற்கு தான் உகந்தது என்பதால் இந்த மாதத்தில் திருமணம் போன்ற பிற உலக சுப நிகழ்ச்சிகள் செய்வது கிடையாது. நாமும் இந்த மாதத்தில் மனத்தூய்மையுடன் இறைவனை வழிபட்டு, இக்கலியுக துன்பங்களிலிருந்து விடுபடுவோம்.