பதிவு செய்த நாள்
10
செப்
2015
12:09
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே உள்ள, கவுண்டன்புதூர் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததால் மண்டல பூஜை துவக்க விழா கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. முதல் நாள் பூஜை கடந்த (8ம் தேதி) துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூஜைக்குத் தேவையான பால், தயிர், இளநீர், புஷ்பங்கள், கனி வகைகள், ஹோம திரவியங்கள், நவதானியங்கள், நெய், வெண்ணெய், சமித்து வகைகள், மஞ்சள் போன்ற பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர்.