உடுமலை: கணியூர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திரம் முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மடத்துக்குளம், கணியூர், ஜோதி நகரில் உள்ளது ஐயப்பன் கோவில். கோவிலில், உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, கணபதி யாகம், கணபதி மூலமந்திர யாகம், சாஸ்தா மூலமந்திர யாகம், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது; மூலவர் ஐயப்பனுக்கு, 21 வகை அபிேஷகம் செய்யப்பட்டது; சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.