Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர ... விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவளமலை - மொடச்சூர் கோவில்கள் அன்னதான திட்டம் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2015
11:09

கோபி: கோபி பவளமலை முருகன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில் ஆகிய மூன்று கோவில்களில், இன்று முதல் அன்னதான திட்டம் துவங்குகிறது. கோபி தாலுகாவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அமரபணீஸ்வரர் கோவில், ஆதிநாராயணர் கோவில், பவளமலை முத்துகுமாரசாமி கோவில், பச்சமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில்கள் பிரசித்தி பெற்ற கோவில்களாக உள்ளன. இக்கோவில்களில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், கடந்த, 2002 ஆக., 15 முதல் அன்னதான திட்டம் செயல்படுகிறது. இக்கோவிலில் உள்ள அன்னதான உண்டியல் வருவாய் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தினமும், மதியம், 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இத்திட்டம், இக்கோவிலில் துவங்கியது முதல், கடந்த ஆக., 31ம் தேதி வரை, 3.90 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பச்சமலை முருகன் கோவில் மற்றும் சாரதா மாரியம்மன் கோவில்களில், ஏற்கனவே அன்னதான திட்டம் அமலில் உள்ளது. பொதுவாக அன்னதான திட்டம் நடைமுறையில் இருக்கும் கோவில்களில், ஓரளவுக்கு பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருப்பதால், பிற வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. இதனால், இம்மூன்று கோவில்களிலும் பக்தர்கள் கூட்டத்தால், கோவில் வருவாய் கணிசமாக உள்ளது. ஆனால், கோபியில் பிரசித்தி பெற்ற கோவில்களான, பவளமலை முருகன் கோவில் மற்றும் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில்களில் அன்னதான திட்டம் துவக்கப்படாமலேயே இருந்தது. கோவில் வருவாயை பெருக்க, அன்னதான திட்டத்தை துவக்க, அறநிலையத்துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு சமீபத்தில் கருத்துரு அனுப்பினர். இதுபற்றி, கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், கோபி பவளமலை, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில்களில், இன்று முதல் அன்னதான திட்டத்தை துவக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இம்மூன்று கோவில்களிலும், இன்று மதியம், 12 மணிக்கு தலா, 25 பேருக்கு அன்னதான திட்டத்தை, தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ளார் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar