கன்னிவாடி : சஷ்டியை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.