திருவள்ளூர்: திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று திருமஞ்சனம் நடைபெற்றது. திருவள்ளூர் பூங்கா நகர் அடுத்த, தேவி மீனாட்சி நகரில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, 32 அடி உயரத்தில் உள்ள மூலவர் ஆஞ்சநேயருக்கு, திருமஞ்சனமும், உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தன. இதில், மூல மந்திர ஹோமம் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரையில் நடைபெற்றது. பின், மூலவர் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தன.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.