திருப்பதி: திருமலையில், ஸ்ரீவாரி சேவார்த்திகளுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.
திருமலையில், 2.10.15-அன்று காலை, தொலைபேசி மூலம், பக்தர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. செயல் அதிகாரி சாம்பசிவராவ் கூறியதாவது: திருமலைக்கு வரும் பக்தர்களிடம் கனிவாக பேசவும், அவர்களை வேகமாக பிடித்து இழுப்பதை தடுக்கவும், ஸ்ரீவாரி சேவார்த்திகளுக்கு திருப்பதியில் உள்ள சுவேதா பயிற்சி கூடத்தில் பயிற்சி அளிக்கப்படும். திருமலைக்கு செல்லும், அலிபிரி பாதயாத்திரை மார்க்கத்தில் உள்ள, அன்னமய்ய மார்க்கம் அருகில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.