மயிலாடுதுறை: நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலை அருகே திருப்புங்கூரில் தேவாரப் பாடல் பெற்ற ஸ்ரீ சிவ லோகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் எனும் ஸ்ரீநந்தனார், சுவாமியை வழிபட்ட தலமாகும். நந்தனார் கோயி லின் உள்ளே போக முடியாத நி லையில் வெளியிலேயே நின்று ஸ்ரீ சிவலோகநாத சுவாமியை தரிசனம் செய்துள்ளார். அப்போது அவ ரது வழிபாட்டுக்காக கோயிலில் இருந்த நந்தி விலகியதாக வரலாறு கூறுகிறது.இதனால் இக்கோயிலி ல் நந்தனாருக்கு தனிசன்னதி உள்ளது. நந்தனாரின் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.அதனை மு ன்னிட்டு கோபூஜை மற்றும் சிறப்பு ஹேமம் நடத்தப்பட்டு, சுவாமி மற்றும் நந்தனாருக்கு அபி÷ ஷகம், மகா தீபாராதனை நடைபெற்றது.கோயில் அர்ச்சகர் பாலாஜி மற்றும் ஆச்சாள்புரம் சம்பந்தம் குருக்கள் ஆகியோர் பூஜைகளை நடத்திவைத்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகெண்டு தரிசனம் செய்தன ர். இரவு சுவாமி வீதியுலாவும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.