கோவில்களில் சிலர் குடும்ப அர்ச்சனை என்று செய்கிறார்களே... ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2015 12:10
அர்ச்சனை என்பது கடவுளின் அருள் பெறுவதற்கான வழிபாடு. பிற்காலத்தில் நமது விருப்பத்தை எல்லாம் சொல்லி, அவை நிறைவேற செய்யும் வழிபாடாக மாறியது. பக்குவம் பெற்ற சிலர், சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து வந்தனர். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்தனர். சிலர் வீட்டிலுள்ளவர்கள் பெயரை சொல்லாமல், பொது குடும்ப நலன் வேண்டி குடும்ப அர்ச்சனை என்ற பெயரில் செய்கின்றனர். இதில் எதுவுமே தவறு அல்ல. ஒரு வழக்கத்தை மேற்கொண்டால், அடுத்த நிலைக்கான பக்குவம் தானாக வரும்.