பிரகலாதன் தன் தந்தையிடம் திருமால் துõணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொன்னபோது, அவனுக்காக துõணில் இருந்து நரசிம்மராக வெளிப்பட்டார். எனவே இவருக்கு துõணில் தோன்றியவர் என்ற பொருளில் கம்பத்துதித்தவன் என்ற பெயர் உண்டு. கம்பம் என்பது துõணைக் குறிக்கும். நரசிம்மரை வணங்குபவர்கள் ராஜபத மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வது சிறப்பைத் தரும். இந்த மந்திரம் நினைத்ததை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தது. 11 முறை தினமும் பாராயணம் செய்தால் எல்லையற்ற ஆற்றல் பெறலாம். மந்திரங்களின் ராஜா என்று இதைச் சொல்வர்.