Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோலைமலை முருகனுக்கு ரூ.1.50 கோடியில் ... ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில் நிலங்களை காப்பாற்ற நடவடிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2015
10:10

பொள்ளாச்சி: கோவில் சொத்துக்களை காப்பாற்றும் நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட நிலங்களில் அறிவிப்புப்பலகைகள் வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை, பொள்ளாச்சி, சூலக்கல், புரவிபாளையம், கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. சிறிய, பெரிய கோவில்கள் வித்தியாசமின்றி, அக்கால அரசர்கள், ஜமீன்தார்கள், பெரும் நிலச்சுவான்தார்கள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை, கோவில்களுக்கு தானமாக வழங்கியுள்ளனர். இந்நிலங்கள் கோவில் பூசாரிகளின் கட்டுப்பாட்டிலும், தொடர்ந்து நிர்வாக கமிட்டியின் பொறுப்பிலும் விடப்பட்டிருந்தன. நாளடைவில், இச்சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலத்தை, கோவில் வருமானத்துக்காகவும், பராமரிப்புக்காகவும் பொதுமக்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான கோவில் நிலங்கள் இன்னும் ஆரம்பகால குத்தகை தொகையிலேயே பலரது கட்டுப்பாட்டில் உள்ளது.

சமீபகாலமாக, இந்நிலங்களை தனியார் நிறுவனங்கள் சில, வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஒரு சிலர் குத்தகை நிலம் என்பதையே மறந்து, பல வகை மரங்களையும், தென்னைகளையும் நட்டுள்ளனர். சிலர் தோப்பாக மாற்றி பராமரித்து வருகின்றனர். இவற்றில், பெரும்பாலான நிலங்களுக்கு முறையான குத்தகைகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு அறங்காவல் துறையில் இருந்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அதிகாரிகள் ஆச்சரியப்படும் வகையில், கோவில் நிலங்கள் அடியோடு உருமாற்றம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. விரைவில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கிடையில், கோவில் நிலங்கள் எங்கெங்கு உள்ளனவோ, அங்கெல்லாம், இது குறிப்பிட்ட கோவிலுக்கு சொந்தனது என, அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளதாக அறங்காவல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவில் நிலத்தை சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு, இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar