Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் ... லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்! லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை, மாளிகைப்புறம் மேல் சாந்திகள் தேர்வு!
எழுத்தின் அளவு:
சபரிமலை, மாளிகைப்புறம் மேல் சாந்திகள் தேர்வு!

பதிவு செய்த நாள்

19 அக்
2015
11:10

சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோவில்களுக்கு கார்த்திகை, 1ம் தேதி முதல், ஓர் ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலையில் கார்த்திகை, 1ம் தேதி முதல் ஓர் ஆண்டு காலத்துக்கு புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகின்றனர். கேரள ஐகோர்ட் வழிகாட்டுதல் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர்கள் சுபாஷ்வாசு, ஐகோர்ட் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனர் பாபு, தேவசம் செயலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில், இந்த தேர்வு நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு துண்டு சீட்டுகள் அடங்கிய பாத்திரத்துக்கு பூஜைகள் நடத்தி கொடுத்தார். பின்னர் பந்தளம் அரண்மனை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சரண் வர்மா துண்டுகளை எடுத்தார். முதலில் எடுக்கப்பட்ட ஏழு பேருக்கு நேராக வெற்றுச்சீட்டு வந்தது.

எட்டாவது சீட்டாக கோட்டயம் மாவட்டம், மன்னார்காடு, அயர்குன்னம் காரக்காட்டு இல்லத்தில் எஸ்.இ.சங்கரன் நம்பூதிரி பெயருக்கு நேராக, மேல்சாந்தி சீட்டு வந்ததால் அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதுபோல மாளிகைப்புறம் கோவிலுக்கு நான்கு பேர் பட்டியல் குலுக்கப்பட்டது. திருச்சூர் தலப்பள்ளியைச் சேர்ந்த, இ.எஸ்.உன்னிகிருஷ்ணன் மாளிகைப்புறம் மேல்சாந்தியாக அறிவிக்கப்பட்டார். பக்தர்கள் கூட்டம்: ஐப்பசி 1ம் தேதியான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar