Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி இராமர் கோயிலில் ... ஜம்பு சவாரியை கண்டுகளிக்க வெளிநாட்டினருக்கு இலவச பாஸ்! ஜம்பு சவாரியை கண்டுகளிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழாவில் கற்பூரம் விற்க தடை: கலெக்டர்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழாவில் கற்பூரம் விற்க தடை: கலெக்டர்

பதிவு செய்த நாள்

20 அக்
2015
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தீப திருவிழாவின்போது கற்பூரம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா, வரும் நவம்பர், 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மஹா கார்த்திகை தீப திருவிழா, 25ம் தேதி நடக்கிறது. திருவிழாவையொட்டி, திருவண்ணாமலைக்கு, 20 லட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவர். கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்க, மாவட்ட நிர்வாகம் சில விதிமுறைகளை அறிவித்து, கட்டுப்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அன்னதானம் செய்ய விரும்புவோர், வரும், 5ம் தேதி முதல், 20ம் தேதி வரை வேலை நாட்களில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்( ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். கிரிவலப்பாதையில் எக்காரணத்தை கொண்டும், உணவு சமைக்க கூடாது. அன்னதானம் வினியோகிக்க தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்படும். உணவுப்பொருள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணைய் அடுப்புகள் பயன்படுத்த, கண்டிப்பாக அனுமதி கிடையாது. கிரிவலப்பாதையில் உரிய அனுமதி வழங்கப்பட்ட பின்பே தற்காலிக கடைகள் அனுமதிக்கப்படும். அனுமதி பெறாத கடைகள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தீப திருவிழா நாட்களில் நகரிலும், கிரிவலப்பாதையிலும் கற்பூரம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar