Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னுமாரியம்மன் கோவில் நவராத்திரி ... ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் இளமையாக்கினார் கோவில் குளம்! ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
400 ஆண்டு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
400 ஆண்டு கல்வெட்டு திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

23 அக்
2015
11:10

திருப்பூர்: திருப்பூர்  – பொள்ளாச்சி சாலையில் உள்ள, சின்ன நெகமத்தில், 400 ஆண்டுகள் பழமையான கோவில் கல்வெட்டு மற்றும் இறந்தவர்கள் நினைவிடமான, ‘பள்ளிப்படை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சின்ன நெகமத்தில், திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வேலுசாமி, பொன்னுசாமி, சதாசிவம், திருநாவுக்கரசு,  ரவிகுமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், கல்வெட்டும், பள்ளிப்படையும் கிடைத்து உள்ளன. ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது: கல்வெட்டில், ‘நிகமம்’ என ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,300 ஆண்டுகளுக்கு முன் உருவான, முதல் வணிகக் குழு பெயர் நிகமம். வணிகக் குழுவுக்கும், இப்பகுதிக்கும் தொடர்பு இருந்துள்ளது. சென்றாய பெருமாள்  கோவில் கர்ப்ப கிரகத்தின் தெற்கு சுவரில், 12 அடி நீளம், 3 அடி அகலத்தில் கல்வெட்டு இருந்தது. அதை மீட்டு, படியெடுத்து படித்தபோது, 13 வரிகள் இருப்பது தெரிய வந்தது. ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற வார்த்தையுடன், வரிகள் துவங்குகின்றன.

கோவில் முன் மண்டபத்தில், கொண்டம நாயக்கர், அவரது மனைவி முத்தம்மாள், பேரன் முத்துவல்ல கொண்டம நாயக்கர், அவரது மனைவி வெள்ளையம்மாள் ஆகியோர் சிலைகள், நான்கு துாண்களில் புடைப்பு சிற்பமாக உள்ளன. கோவில் அருகில், பள்ளிப்படை என அழைக்கப்படும், இறந்த நால்வரின் நினைவிடங்களும், அவர்களின் சிலைகளும் உள்ளன. வரதராஜ பெருமாள் கோவிலில், 4 அடி நீளம்; 1.5 அடி அகலத்தில், எட்டு வரிகள் அடங்கிய எழுத்து கல்வெட்டு உள்ளது. இதிலும், வெள்ளையம்மாள் செய்த திருப்பணிகள் பற்றிய தகவல்கள் உள்ளன.  இதன் வாயிலாக, சோழப் பேரரசில், செம்பியன் மாதேவியார் போல், பாளையக்காரர்கள் ஆட்சியிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்துள்ளதையும், அவர்கள் செய்த திருப்பணிகள் குறித்தும் அறிய முடிகிறது. இவ்வாறு ரவிகுமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகரை வழிபட உகந்த நாளாகும், தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 5 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar