Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக முழுவதும்.. கல்லறை தினம் இன்று ... ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளி விழா ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு!
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு!

பதிவு செய்த நாள்

02 நவ
2015
10:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் கிராமத்தில் உள்ள திருமலை பகவான் கோவிலில் இருந்த பெருமாள் மற்றும் தாயார் சுவாமிகளின்  ஐம்பொன் சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 100 ஆண்டுகளுக்கும் மேல்... காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்டது, மாகரல் கிராமம். இந்த  கிராமத்திலிருந்து காவாந்தண்டலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ளது, கௌசலாம்பிகை தாயார் சமேத திருமலை பகவான் கோவில். நுாறு  ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த இக்கோவிலை, மாகரல் கிராமத்தில் உள்ள திருமலை ஐயங்கார் என்பவர் பராமரித்து வருகிறார். கடந்த  வெள்ளிக்கிழமையன்று, பூஜைகளை முடித்து வீடு திரும்பிய திருமலை ஐயங்கார், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கோவிலை திறக்க  சென்றுள்ளார்.  அப்போது, கோவிலின் முன்பக்க கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கோவிலின் உள்ளே  சென்று பார்த்த போது கோவிலின் கருவறையில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட, 2 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் தாயார் சுவாமிகளின்  உற்சவ சிலைகள், திருடுபோனது தெரியவந்தது. 20 வகையான பொருட்கள் சுவாமி சிலைகளுடன், கோவிலிலிருந்த குத்துவிளக்கு, சடாரி,  பஞ்சபாத்திரம், செப்பு தோண்டி, தவளை உள்ளிட்ட, 20 வகையான பொருட்களும் திருடு போனது. இதுகுறித்து திருமலை ஐயங்கார், மாகரல் போ லீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த போலீசார், சம்பவஇடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து நேற்று வழக்குப்பதிந்த  மாகரல் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar