ராஜபாளையம்: ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள ஆதிவழிவிடு விநாயகர் கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை சிறப்பு யாகத்துடன் மண்டலாபிஷேகம் நடந்தது. விநாயகர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. பிற்பகல் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜூ செய்தார்.