Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிவழிவிடு விநாயகர் கோயிலில் ... பாடலீஸ்வரர் கோவில் நாயன்மார்களுக்கு மண்டலாபிஷேகம்! பாடலீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் துர்நாற்றம்: பக்தர்கள் முகம்சுளிப்பு!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் துர்நாற்றம்: பக்தர்கள் முகம்சுளிப்பு!

பதிவு செய்த நாள்

04 நவ
2015
11:11

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தடைசெய்யப் பட்ட இரட்டைமடி வலையில் சிக்கிய பேசாளை மீன் கழிவுகளால், அக்னி தீர்த்த கடலில் வீசிய துர்நாற்றம் பக்தர்கள் முகம் சுளிக்க வைத்தது. கடல் வளம், மீன் வளத்தை அழிக்கும் இரட்டைமடி, சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ் வரத்தில் மீன்துறை அதிகாரிகள் ஆசியுடன் கடந்த சில மாதமாக நாட்டுபடகு மீனவர்கள் சுருக்குமடி வலைகளையும், விசைபடகு மீனவர்கள் இரட்டைமடி வலை களையும் பயன்படுத்தி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண் டுள்ளனர். இந்நிலையில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்துவிட்டு நேற்று காலை விசைபடகு மீனவர்கள் கரை திரும்பினர். ஒவ்வொரு படகிலும் 8 முதல் 10 டன் வரை பேசாளை மீன்கள் சிக்கியது. இவற்றை ஆயில் கம்பெனிகளுக்காக ஒரு கிலோ 10 முதல் 12 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி துõத்துக்குடி, கன்னியா குமரிக்கு அனுப்பினர். அதிக படியான பேசாளை மீன் வரத்து மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

அக்னி தீர்த்தம் அசுத்தம்: பேசாளை மீனின் வழுவழுப் பான கழிவுகள் அக்னிதீர்த்த கடலில் மிதந்ததால் புனித நீராடிய பக்தர்கள் உடலில் மீன் கழிவுகள் படிந்து துர்நாற்றம் வீசியது. இதனால் முகம்சுளித்த பக்தர்கள் பலர் நீராடாமல் திரும்பி சென்றனர். அக்னி தீர்த்தத்தில் நீராடிய கோவை பக்தர் பாதராஜ் 52, கூறுகையில், அக்னி தீர்த்தம் கழிவுகள் கலந்து கருப்பு நிறத்தில் உள்ளது. இதனுடன் மீன் கழிவும் சேர்ந்துள்ளதால் உடலில் படிந்து துர்நாற்றம் வீசுகிறது. குளிக்கவே அருவருப்பாக உள்ளது, என்றார்.  இந்து மக்கள் தலைவர் பிரபாகரன் கூறுகையில்,தடையை மீறி இரட்டைமடி, சுருக்கு மடியில் மீன்பிடிக்கும் படகுகள் மீது மீன்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.  பேசாளை மீனில் வெளியேறிய கழிவுகள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் உடலில் படிந்ததால், பலர் குளிக்காமல் திரும்பி சென்றனர். அக்னி தீர்த்தம் சீரழிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar