Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ... ரங்கநாதபெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை ரங்கநாதபெருமாள் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் திருவிழாவுக்கு திருத்தேர் தயார்!
எழுத்தின் அளவு:
சூலக்கல் மாரியம்மன் திருவிழாவுக்கு திருத்தேர் தயார்!

பதிவு செய்த நாள்

05 நவ
2015
10:11

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் திருத்தேர் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் சூலக்கல் மாரியம்மன் கோவில் முக்கியமானது. ஆண்டுதோறும், 18 கிராம மக்கள் அம்மனை நேர்கொண்டு வழிபட்டு, மாவிளக்கு எடுத்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கோவில் திருவிழாவும், திருத்தேர்வடம் பிடித்தலும் நடக்கவில்லை. இதற்கு, பல நுாறாண்டுகள் பழமையான தேரை, புதுப்பித்த பிறகே, விழா நடத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டதே காரணமாகும். சக்தி வாய்ந்த அம்மனை தரிசிக்க, கோவை மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் பொதுமக்கள் வந்து சென்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இச்சூழலில், பழுதடைந்த தேருக்கு பதிலாக, புதுத்தேர் அமைக்கும் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, 27.5 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஆண்டு பணிகள் துவங்கின. பெரம்பலுார் மற்றும் பழநியைச் சேர்ந்த 15 சிற்பிகள் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓராண்டாக நடந்து வரும் இத்தேர் அமைக்கும் பணி, தற்போது முடிவு பெறும் நிலைக்கு வந்துள்ளது. இதுகுறித்து கோவில் அலுவலர்களிடம் கேட்டபோது, தற்போது, புதிய தேர் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணிகள் நடக்கிறது. இன்னும் ஒரு மாதகாலத்தில் இப்பணிகள் நிறைவு பெற்று விடும். அதன்பிறகே, கோவில் திருவிழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar