Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மலையனூர் கோவில் கும்பாபிஷேக ... திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 16 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைகிரி கோவில் கும்பாபிஷேக பிரச்னை: 144 தடை உத்தரவு நீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2015
11:11

சேலம்: திருமலைகிரி கோவில் பிரச்னை தொடர்பாக, 21 கிராமங்களில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. கடந்த மாதம், ஐந்து கிராமங்களில் தடை உத்தரவு நீக்கிய நிலையில், தற்போது, மேலும், ஆறு கிராமங்களுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது. திருமலைகிரி, சைலகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக, இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை எழுந்ததால், கடந்த, மார்ச், 4ம் தேதி, அக்கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், பதட்டத்தை தணிக்க, 21 கிராமங்களில், 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த கிராமங்களில், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, கூட்டமாக நிற்போரை விரட்டி வந்தனர். படிப்படியாக, இந்த கிராமங்களில் பதட்டம் தணிய ஆரம்பித்தது. கோவில் பிரச்னை, நீதிமன்றத்தில் உள்ளதால், பொதுமக்களும் அமைதி காக்க ஆரம்பித்தனர். தடை உத்தரவை நீக்குவது தொடர்பாக, கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். கடந்த மாதம், 2ம் தேதி, கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆலோசனையின்படி, சூரமங்கலம், கந்தம்பட்டி, கீரபாப்பம்பாடி, அரியாகவுண்டம்பட்டி, சித்தனூர் ஆகிய ஐந்து கிராமங்களில், 144 தடை நீக்கப்பட்டது. மேலும், 16 கிராமங்களில், தடை உத்தரவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம், ஆர்.டி.ஓ., விஜயபாபு உத்தரவின்பேரில், காட்டூர், கொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி, நாயக்கன்பட்டி, முருங்கப்பட்டி, நல்லாம்பட்டி ஆகிய ஆறு கிராமங்களில், 144 தடை நீக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 21 கிராமங்களில், தற்போது, 10 கிராமங்களில் மட்டுமே தடை உத்தரவு நீடிக்கிறது. இதற்கான உத்தரவை, அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்களுக்கு, சேலம் ஆர்.டி.ஓ., விஜய்பாபு கடிதமாக அனுப்பி வைத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar