திருவொற்றியூர் – தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை இரவு 7:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது; மார்ச், 4ம் தேதி வரை, 10 நாட்களுக்கு நடக்கிறது. தொடர்ந்து, தியாகராஜ சுவாமி உற்சவம் நடக்கும். பெருவிழா நாட்களில், உற்சவர் சந்திரசேகரர் – மனோன்மணி தாயார், சூரிய, சந்திர பிரபை, சிம்மம், நாகம், பூதம், ரிஷபம், அதிகாரநந்தி, அஸ்தமானகிரி, யானை, குதிரை, இந்திர விமானம் மற்றும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வருவார். இரவில், தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடக்கும். விழாவின் முக்கிய நிகழ்வான, சந்திரசேகரர் அபிஷேக அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருரும் வைபவம், வரும் 28ம் தேதி, காலை 7:30 – 9:11 மணிக்குள் நடக்கும். கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், மார்ச், 2 ம் தேதி, காலை, 10:10 –11:54 மணிக்குள் நடக்கிறது. மார்ச், 4ல், பின் இரவில், தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம் – 18 திருநடனத்துடன், மாசி பிரமோற்சவ பெருவிழா நிறைவுறும்.