Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் குபேர ... மருதமலையில் கந்த சஷ்டி இன்று கோலாகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கம் வைத்து வெற்றிலை வளர்த்த மதுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2015
11:11

மதுரை : சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. ருசி, நுண்ணுாட்ட சத்துக்கள் மிகுந்த மதுரை கொழுந்து வெற்றிலையின் அருமையை, உலகிற்கு எடுத்து சென்ற பெருமை, சோழவந்தான் கொடிக்கால் வெற்றிலை விவசாயிகளுக்கு உண்டு. ஆந்திரா மோட்டா, கர்நாடகா கருப்பு என ஒட்டு ரக வெற்றிலையில் பல ரகங்கள் உண்டு. ஒட்டு ரகம் இல்லாத நாட்டு வெற்றிலை மதுரை சோழவந்தானில் மட்டும் விளைகிறது. இளம் பச்சை நிறத்தில்... அரச இலை போல் சிறிய அளவிலுள்ள சோழவந்தான் வெற்றிலைக்கு இன்றும் மவுசு குறையவில்லை.

முதல் சங்கம்: வெற்றிலை விவசாயத்தில் நேரடியாக, மறைமுகமாக விவசாயிகள், வியாபாரிகள் பயனடைகின்றனர். வெற்றிலை விவசாயத்தை அழிவில் இருந்து காக்கும் பொருட்டு 1964ல் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக துரைச்சாமிபிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அழுகாத வெற்றிலை: சோழவந்தான், திருவேடகம் உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை சங்க கட்டடத்துக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளியூர்களுக்கு பச்சை வாழை மட்டையில் வெற்றிலையை பக்குவமாக அடுக்கி அனுப்புவர். பச்சை வாழை மட்டையில் வெற்றிலையை அடுக்குவதால் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு வெற்றிலை அழுகாது.

ஏற்றுமதி தரம் வாய்ந்தது: ஆந்திரா, கர்நாடகா வெற்றிலை தடிமனாக, காரச்சுவை அதிகமாக இருக்கும். இவற்றில் சுவை மற்றும் சத்துக்கள் குறைவு. சோழவந்தான் வெற்றி லையில் சுவை, நார்சத்துக்கள் அதிகம். வெளிநாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 500 கிலோ அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பரப்பளவு சுருங்கியது:
வெற்றிலை விவசாயி செல்வம்: முன்பு 1500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை கொடிக்கால் சுருங்கி விட்டது. பூச்சித்தாக்குதல், செலவினம் உள்ளிட்ட காரணங்களால் தொழிலுக்கு பாதிப்பு.

வெற்றிலை வியாபாரி சிருகாமணி: நாட்டு வெற்றிலையில் தான் சுவை அதிகம். சோழவந்தான் வெற்றிலை சங்கத்தில் இருந்து தினமும் வெற்றிலையை விலைக்கு வாங்கி சில்லரை வியாபாரம் செய்கிறேன். மொத்தம் 20 வியாபாரிகள் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar