திருப்போரூர்: மூன்று ஆண்டுகளாக திருப்போரூர் கந்தசாமி கோவில் திருப்பணிகள் நடந்தன. கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, நேற்று, காலை 8:30 மணியளவில், கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. காலை 9:00 மணியளவில், கந்தசாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா நடைபெற்றது.