Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை முருகன் கோயிலில் ... ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் ஆணவத்துடன் வந்த சூரனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2015
06:11

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் ஆணவத்துடன் வந்த சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இதில் 10 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.

Default Image
Next News

முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு முருகபெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, சிவபெருமானை வழிபட்ட புகழ் பெற்ற திருத்தலமாகும். இந் நிகழ்ச்சியினை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

கந்தசஷ்டி விழா நவ., 12 ல் துவங்கியது . ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோயில் வளாக பகுதிகளில் தங்கி விரதம் இருந்து வந்தனர். தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தினமும் காலை 6 மணிக்கு யாகசாலையில் ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளினார். பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 1.30 மணிக்கு எழுந்தருளுவார். பின் ஜெயந்தி நாதர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோயில் வந்து சேரும் நிகழ்ச்சிகள் நடந்தது. கோயிலில் உள்ள மண்டபத்தில், தினசரி கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தது. சூரசம்ஹாரம்: இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 6மணிக்கு யாகசாலை மணடபத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.

மதியம் 1 மணிக்கு சண்முக விலாச மண்டபத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. மாலை 4.00 மணிக்கு ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். பின் 4.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஜெயந்திநாதர் புறப்பட்டார். சூரன் ஆணவத்துடன் 5 மணிக்கு புறப்பட்டு வந்தான் அங்கு கஜமுகத்துடன் வந்த சூரனின் தலையை ஜெயந்திநாதர் மாலை 5.19 மணிக்கு கொய்தார்.பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பினர். பின் சிங்கத்தலையுடன் வந்த சூரனை 5.39 க்கு,ஜெயந்திநாதர் தலையை கொய்தார். சூரபதுமனாக வந்தவனை 5.53மணிக்கு தலையை கொய்தார். இறுதியில் சேவலாக வரும் சூரனின் உடலை இரண்டாக பிளந்து, ஒரு பகுதியை மயிலாகவும், ஒரு பகுதியை சேவலாகவும் ஜெயந்தி நாதர் ஆட் கொண்டார். ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குளித்து முருகனை தரிசித்து விரதத்தை முடித்துக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar