Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி ... பம்பையில் பக்தர்கள் செலுத்தும் ஆடைகளை சேகரிக்க தொட்டிகள்! பம்பையில் பக்தர்கள் செலுத்தும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் கிறிஸ்து ஆலயத் தேர்த்திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
நாமக்கல் கிறிஸ்து ஆலயத் தேர்த்திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

23 நவ
2015
11:11

நாமக்கல் : நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனிதரை வணங்கினர். நாமக்கல்-திருச்சி சாலையில், கிறிஸ்து அரசர் ஆலயத்தில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை, நவநாள் திருப்பலி, திருச்செங்கோடு மறைமாவட்ட முதன்மை குரு பிரான்சிஸ் ஆசைத்தம்பி, இறையரசு தியான மைய இயக்குனர் விஜய் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில், நடந்தது.நேற்று கிறிஸ்து அரசர் பெருவிழா கோலாகலமாக நடந்தது. காலை, 8.30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில், திருநாள் திருப்பலி, மாலை, 6 மணிக்கு, சிறப்பு திருப்பலியும் நடந்தது. அதை தொடர்ந்து, மாலை, 6.30 மணிக்கு, கிறிஸ்து அரசர் தேர்பவனி நடந்தது.அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த அரசர், பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். நகரின் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்கினர். அதையடுத்து, இரவு, 9.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, பங்குத்தந்தைகள் பிரான்சிஸ், ஆரோக்கிய டேவிட், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar