Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
4 ஆண்டுக்கு பின் நிரம்பிய கோயில் ... பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வலுப்பூரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2015
11:11

பொங்கலூர்: பொங்கலூர் வலுப்பூரம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, வேத மந்திரம் முழங்க, கோபுர கலசங்களுக்கும்; தொடர்ந்து, வலுப்பூரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கும்பாபிஷேகம் நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. காலை, 10:15க்கு, புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. நண்பகல், 12:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அமைச்சர் ஆனந்தன், எம்.எல்.ஏ., பரமசிவம், அலகுமலை அறங்காவலர் குழு தலைவர் சின்னு, மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய தலைவர் சிவாசலம், வலுப்பூரம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் சிதம்பரம், உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயின் மாயம்: கும்பாபிஷேகத்துக்காக யானை, குதிரைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. ஆட வைப்பதற்காக, குதிரைகளை அடித்து துன்புறுத்தியதாக, பக்தர்கள் சிலர் வேதனையுடன் குறிப்பிட்டனர். அதேபோல், கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர் ஒருவரின், நான்கு பவுன் செயின், கூட்டத்தில் காணாமல் போனதால், சலசலப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar