Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்ப சுவாமி கோவில்களில் ... பெருமாள் கோவிலில் கார்த்திகை தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வரும் பக்தர்கள் வாகனம் நிறுத்த கூடுதல் வசதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2015
11:11

நாகர்கோவில்: சபரிமலை வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கூடுதல் வசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல் முக்கிய வாகன நிறுத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் அரசு பஸ்களில் வருவதை விட தனியார் வாகனங்களில் வருவதை விரும்புகின்றனர். இதனால் ஒவ்வொரு சீசனிலும் லட்சக்கணக்கான வாகனங்கள் சபரிமலை சென்று திரும்புகிறது. இந்த வாகனங்களை நிறுத்த பம்பையில் போதுமான வசதிகள் இல்லை. இதனால் நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டது.இந்த ஆண்டு நிலக்கல்லில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பத்தாயிரம் வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இங்கு தரை இண்டர்லாக் கான்கிரீட் கட்டைகள் மூலம் அழகு படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து மாநில தகவல் மையங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.நிலக்கல் தவிர பம்பையில் பம்பை ஹில்டாப்1, 2, சக்குப்பபாலம்1, 2 என நான்கு வாகன நிறுத்தங்கள் உள்ளன. இங்கு கார் போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே பார்க்கிங் செய்யப்படுகின்றன.வேன், பஸ் போன்றவை பம்பையில் பக்தர்களை இறக்கி விட்டு, நிலக்கல் சென்று விட வேண்டும். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் நிலக்கல் சென்று அங்கிருந்து ஊருக்கு செல்ல வேண்டும்.வாகனம் நிறுத்தும் இடத்துக்கான டோக்கன் சாலக்கயத்தில் போலீசால் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும். அங்கு பார்க்கிங் கட்டணம் குத்தகைதாரரால் வசூலிக்கப்படும். இந்த சீசன் தொடக்கத்தில் திருவேணியில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு கார்கள் மூழ்கியதால் அங்கு வாகனம் நிறுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று ... மேலும்
 
temple news
 – நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் ... மேலும்
 
temple news
 வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar