புதுச்சேரி: புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.30 மணிக்கு, கோவில் கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டு மகா தீபாராதனை நடந்தது. இரவு 10.00 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மயில் வாகனத்தில், வள்ளி தெய்வானையுடன் முருகர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.