பதிவு செய்த நாள்
27
நவ
2015
12:11
தேனி: தேனி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு 4 இடங்களில் 24 மணி நேர சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு உணவு, காபி, குடிநீர், மருத்துவசேவைகள் இலவசமாக கிடைக்கும். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி வேல்நகர், பெரியகுளம், வீரபாண்டி, சின்னமனூர் ஆகிய 4 இடங்களில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேர சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம், தூங்கும் இடம், கழிப்பறை, குளியலறை வசதிகள் இலவசமாக செய்து தரப்படுகிறது. மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் சேவை வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.சேவை மைய மாநில இணை செயலாளர் பி.கணேசன் கூறுகையில்,"" நீண்ட தூரம் பயணம் செய்யும் பக்தர்கள், இடையில் ஓய்வெடுக்கும் போது, திருட்டுக்கும்பலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க, பக்தர்கள் சேவை மையங்களில் தங்கி ஓய்வெடுக்கலாம். அவர்களுக்காக வேலம்மாள் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய இலவச மருத்துவ சேவை வழங்க உள்ளோம். இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.