புதுச்சேரி: கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலி சார்பில், புதுச்சேரியில் நான்கு இடங்களில் உஞ்சவிருத்தி நாமசங்கீர்த்தனம் நடந்தது.
கும்பகோணம் அடுத்த திருவிசலுார் ஸ்ரீதர அய்யாவாள் கங்காவதரண மகோற்சவம் வரும் டிச. 2ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி, புதுச்சேரி கிருஷ்ண பிரேமி பஜனை மண்டலி சார்பில், நேற்று புதுச்சேரியில் நான்கு இடங்களில் உஞ்சவிருத்தி நாமசங்கீர்த்தன பஜனை நடந்தது.
ரெயின்போ நகர் சுமுக விநாயகர் கோவிலில் நேற்று காலை 7:15 மணி துவங்கி 8.00 வரையும், 8:15 மணி முதல் 9:00 வரையில் பிருந்தாவனம் சதானந்த வினாயகர் கோவிலிலும், குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலில் 9.15 முதல் 10.15 மணி வரையும், எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம் பாள் கோவிலில் 10;30 முதல் 12:30 மணி வரையிலும் உஞ்சவிருத்தி நாமசங்கீர்த்தனம் பஜனை நடந்தது. ஸ்ரீமடத்து பாகவதர்கள் பங்கேற்றனர்.