கீழக்கரை:ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் அஷ்டாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்கள் விநாயகர், ஐயப்பன், மஞ்ச மாதா தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலையில் கணபதி ஹோமத்துடன் அஷ்டாபிஷேக பூஜைகள் நடந்தது. இரவு கூட்டு வழிபாடுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழி பாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.