திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு டிச., 8ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் கார்த்திகை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பிரம்மோற்சவம் நிறைவு நாளான நேற்று தாயார் தங்கப் பல்லக்கில் சர்வாலங்கார பூஷிதையாக திருக்குளத்தருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். பின் தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து , க்கரதாழ்வாருக்கு திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். இரவு பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.