Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி திருவிழா: இன்று ... ஸ்ரீவில்லிபுத்தூரில் சொர்க்க வாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தினசரி வழிபாடாக மாறிய களபபூஜை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தினசரி வழிபாடாக மாறிய களபபூஜை

பதிவு செய்த நாள்

21 டிச
2015
12:12

சபரிமலை: சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான களபபூஜை தற்போது தினசரி வழிபாடாக மாறியுள்ளது. இதற்கு 19 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3.15 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெறும். இதனால் ஐயப்பனின் விக்ரகத்தில் ஏற்படும் சூட்டை தணிப்பதற்காகவும், ஐயப்ப சைதன்யத்தை (சக்தி ) அதிகரிப்பதற்காகவும் களபபூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை பக்தர்களின் வழிபாடாக நடத்தப்படுகிறது.

பூஜிக்கப்பட்ட பிரம்ம கலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு அதனை மேல்சாந்தி கையில் ஏந்திய படி தந்திரி மற்றும் தேவசம் அதிகாரிகளுடன் கெட்டி மேளம் முழங்க கோயிலை வலம் வருகின்றனர். பின்னர் ஸ்ரீகோயிலுக்குள் கலசம் கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனின் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டுக்கு தேவசம்போர்டு கட்டணமாக மூவாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் களபாபிஷேகத்துக்கான பொருட்களுக்க 16 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். களபாபிஷேகம் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப்படும் மிக முக்கிய வழிபாடு என்று தேவசம்போர்டு அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சபரிமலையில் தற்போது களபபூஜை ஒரு வழிபாடாக நடத்தப்படுகிறது. தற்போது எல்லா நாட்களிலும் களபபூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் அதிக அளவில் இந்த வழிபாட்டில் பங்கேற்கின்றனர். முன்பு ஆண்டுக்கு ஒரு முறை ஜன,18-ம் தேதி மட்டும்தான் களபபூஜை நடைபெற்றது. இப்போது வழிபாடாக எல்லா நாட்களிலும் நடக்கிறது, ஐயப்ப சைதன்யத்தை அதிகரிக்கவும், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றவும் வேண்டி களபபூஜை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar