Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
700 ஆண்டு பழமையான கல்வெட்டு ... கள்ளக்குறிச்சி கோவில்களில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்வ சமயத்தவரும் வழிபடும் சலேத் அன்னை ஆலயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2015
11:12

கொடைக்கானல், : கொடைக்கானலில் மும்மதத்தினரும் வழிபடும் தலமாக சலேத் அன்னை ஆலயம் திகழ்கிறது.இந்த ஆலயம் 2016, ஆகஸ்டில் தனது 150ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளது. ஆண்டுதோறும் ஆக.,14ல் சலேத் அன்னை திருஉருவ சிலை அலங்கரிக்கப்பட்டு சப்பர பவனி யாக நகரில் எடுத்துச் செல்லப்படுகிறது. லூயிஸ்ட் சீர் அடிகளார் தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து நலம் பெற்றதன் நினைவாக கொடைக்கானல் மலையில் ஆலயம் எழுப்ப விரும்பினார். அவரை போன்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கவுண்டஸ் டிவோட்ரிமோன்ட் என்ற பெண், தனது மகள் குணம் பெற்றதால் நன்றி செலுத்தும் வகையில், லூயிஸ் சான்ட் அடிகளாரிடம் மலையில் ஆலயம் அமைக்க நிதி உதவி செய்தார்.

ஆலய பணியானது 1863 ல் துவங்கி 1866ல் நிறைவுப்பெற்றது. 1883ல் ஆலயத்தின் முன்கூடம் அமைக்கப் பட்டது. 1884 -1885 ஆண்டுகளில் ஆலயத்தின் பக்கவாட்டில் 5 மீட்டர் நீட்டப்பட்டு அதன் முகப்பில் சிலுவை வைக்கப்பட்டது. மேலும் சதுரமணி கோபுரமும் எழுப்பப்பட்டது. சலேத் அன்னையின் உருவச்சிலையும், சூசையப்பர் உருவச்சிலையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கிரேநோபிள் ஆயரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இங்குள்ள சிலுவைப்பாதை படங்கள் இத்தாலி நாட்டு மறைப்பணியாளர் ஒருவரால் வரையப்பட்டவை. கண்ணாடி ஜன்னல்களில் வண்ணச் சித்திரங்களை தீட்டியவர் போங்கிலேர் என்னும் பிரெஞ்சு பெண்ணின் மகள். 1999ல் சதுரமணிக்கான பணிகளுக்கு பேபி ஜோசப் குடும்பத்தினர் உதவி புரிந்தனர். பல்வேறு புராதன சிறப்புகளுடன் திகழும் ஆலயத்தை உருவாக்கிய லூயிஸ் சான்ட் சீர் அடிகள் 1887, ஜனவரியில் இறந்தார். அவரது உடல் ஆலய முகப்பில் புதைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வேலைக்காக குடியேறிய கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் ஆலயத்தை விரிவுபடுத்த பாதிரியார் பார்த்தே என்பவரால் 1910, மேயில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1911ல் இருதய ஆண்டவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது பாதிரியார் ஜெரோம் எரேனிமுஸ், உதவி பாதிரியார் தினகரன் ஆகியோர் ஆலய பணிகளை நடத்தி வருகின்றனர். சர்வ சமயத்தினரும் வழிபடும் தலமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar