பதிவு செய்த நாள்
24
டிச
2015
11:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவிலில் திருமுறை பாடல் பயிற்சி பெறும் குழந்தைகள் சுவாமிக்கு பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர். அ@த@பால் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், கமலா நேரு தெரு ஏகாம்ப@ரஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பரமபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கனந்தல் உமாமகேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சின்னசேலம் :தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவில், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர் கோவில், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், பஞ்சாட்சர நாதர் கோவில் ஆகியவற்றிலும், பிரதோஷ வழிபாடு நடந்தது.