பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி 30 மணி நேரம் மஹா மந்திர ஹரே ராம நாமகீர்த்தனம் நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் 50 கோடி ராமநாமத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகளின் கூட்டு பிரார்த்தனை நடந்தது. பள்ளி தாளாளர் லதா ஜெகதீசன், செயலர் விஜயராணி, உறுப்பினர் சின்னச்சாமி, முதல்வர் பார்வதி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.