பதிவு செய்த நாள்
24
டிச
2015
12:12
கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், இன்று முதல் சிறப்பு பூஜை வழிபாடு துவங்குகிறது. வரும், 26ம் தேதி மற்றும், 27ம் தேதிகளில், சீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று காலை, கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. நாளை, அமராவதி ஆற்றில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புனிதநீர் கொண்டு வருவர். ஐயப்ப ஸ்வாமிக்கு அபி?ஷகங்கள் செய்யப்பட்டு, காலை, 9 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை, 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜையில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தீர்க்க ஐயப்பனை வழிபடுகின்றனர். ஜனவரி, 9ம் தேதி காலை, 7 மணிக்கு பசுபதி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு மஹாயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், பசுபதி ஆஞ்சநேயர் திருவீதி உலா இரவு, 7 மணிக்கு நடக்கிறது. கோவில் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கவும், பக்தர்கள் அமர்ந்து ஐயப்பனை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.