டி.என்.பாளையம்: மீலாதுநபி விழாவையொட்டி, டி.என்.பாளையம் பள்ளிவாசலில் நேற்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், கோட்பாடுகள் பின்பற்றுவது போன்ற சொற்பொழிவு, பிரசங்கம் நடந்தது. தொடர்ந்து, நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்